search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசார் ரோந்து பணி"

    • வியாபாரிகளிடம் அபராதம் விதிப்பதை வணிகவரித்துறை அதிகாரிகள் தவிர்க்க வேண்டும்
    • கஞ்சா, மது உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை முழுமையாக தடை செய்ய வேண்டும்.

    திருப்பூர் : 

     தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பூர் யூனியன் மில் ரோட்டில் நடைபெற்றது. கூட்டத்தில் சோதனை கொள்முதல் என்ற பெயரில் வியாபாரிகளிடம் அபராதம் விதிப்பதை வணிகவரித்துறை அதிகாரிகள் தவிர்க்க வேண்டும். ஒருங்கிணைந்த கோவை மண்டலத்தை தொழில் பாதுகாப்பு மண்டலமாக அரசு அறிவிக்க வேண்டும். தமிழகத்தில் கஞ்சா, மது உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை முழுமையாக தடை செய்ய வேண்டும். புகையிலை பொருட்கள் விற்பனையில் பழைய வழக்குகளை காட்டி வியாபாரிகளின் வங்கிக் கணக்குகளை முடக்குவதை நிறுத்த வேண்டும். சுதேசி வியாபாரத்தை ஊக்குவிக்க வேண்டும். கோவையில் இருந்து தூத்துக்குடிக்கு நேரடி ரெயில் இயக்கப்பட வேண்டும். வியாபார ரீதியாக பணப்புழக்கம் உள்ள திருப்பூரில் அடிக்கடி வழிப்பறி நடப்பதால் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


    • 25 பாட்டில்கள் பறிமுதல்
    • சிறையில் அடைப்பு

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி நியூ டவுன் சாலையில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப் போது அங்கு அரசு மதுபான பாட்டில்களை வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்த கோனாமேடு பகுதியை சேர்ந்த சசிகுமார்(வயது26) அரவிந்த்குமார்(25) ஆகிய இருவரையும் பிடித்தனர்.

    அவர்களிடம் விற்பனைக்காக வைத்திருந்த 25 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • 70 மதுபாட்டில்கள், மொபட் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணியை அடுத்த சதுப்பேரி பகுதியில் டாஸ்மாக் மதுபா னங்களை வீட்டில் பதுக்கி வைத்து அதிகவிலைக்கு விற்பனை செய்து வருவதாக களம்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சத்யா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது செல்வராஜ் (வயது 60) என்பவரின் வீட்டில் அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்வது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து சுமார் 70 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் மது விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட மொபட்டையும் பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து களம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×